கிறிஸ்து பிறப்பு கவிதை-3 | Christmas Kavithai in Tamil
jesus kavithai (3) காரிருள் நடுவே பேரொளி உதித்தது மரியின் மடியில் சுடரொளி தவழ்ந்தது மார்கழி பனியில் பாலகன் மலர்ந்தது பாருலகே மகிழ்ச்சியில் மிதந்தது. காக்கும் கடவுளே உருக்கொண்டு வந்தது கலங்கரை விளக்காய் பூமியில் மிளிர்ந்தது காவல் இடையனுக்கு காட்சிகள் கிடைத்தது காலமெல்லாம் அவர் புகழ் விரிந்தது. மாரியும் பனியும் மாறி மாறி பொழிந்தது மலரின் மணமோ மாட்டு தொழுவில் கலந்தது வானின் விடிவெள்ளி பூமியில் புலர்ந்தது பாரில் அவர் புகழ் பாரெல்லாம் பறந்தது. பெத்லேகேம் உலகினில் […]