இயற்கையின் அழகை வர்ணிக்கும் கவிதை
தென்றலின் அணைப்பில் மெய் மறந்து
தலையசைத்து விளையாடுது நெற்கதிர் – அதை
அலுக்காமல் குலுக்காமல் இங்கு
அணைத்து ஆடுது சூரியகதிர்!
பச்சை கம்பளத்தில் நிலமகளை
போர்த்தி அனைத்தது புல்வெளி – இங்கு
இச்சையோடு பார்க்க தூண்டும்
இதய குடிலாய்லாய் வயல் வெளி!
புல் மணியின் தலைசுமையில்
நெல்மணிகள் நாட்டியமாட அதை
கண்மணிகள் காவியமாக்கி
கவிதை வரியாய் நெஞ்சில் பாட!…
நில மகளின் மடி மீது புகுந்து
விளையாடுது மண்புழு -அங்கு
பயிர்மகளின் வளர்ச்சிக்கு
பங்கு கொடுக்கிற உழவனாகிறது.
தாயின் மடி மீது குழைந்து
தாவியோட துடிக்குது நீர் துவாலை – அதை
வேர் இனங்கள் வளைத்து
உயிர் துடிக்குது நெல்மாலை…
இயற்கை எழில் கொஞ்சும்
இச்சோலை – மனித வாழ்வில்
செயற்கை எத்தனைவரினும்
எழில் பெறுமே பூஞ்சோலை…
Vayal Veli Kavithai


environment Kavithai in tamil, Iyarkai kavithai in Tamil, Nature Kavithai, Vayal Kavithai in Tamil, இயற்கை கவிதை, இயற்கை வயல் கவிதைகள், நெல்வயல் கவிதை, பச்சை பசேல் கவிதை, பச்சை வயல் கவிதை, வயல் பற்றிய கவிதை, வயல்காட்சி கவிதை, வயல்வெளி கவிதை

