💔 முன்னுரை
காதல் என்பது இனிமையான ஒரு உணர்வு என்று பலர் சொல்வார்கள்.ஆனால் சில நேரங்களில் அது நம்மை நொறுக்கும் வலியாக மாறுகிறது.நம்மை நாமே புரிந்து கொள்ள முடியாமல்,நம்முள் ஒரு வெறுமையை உருவாக்கும் அந்த உணர்வு.அது உண்மையிலேயே காதலா?அல்லது ஒரு வலியா?..இந்த பதிவில், காதலின் வலியை உணர்த்தும் ஒரு ஆழமான தமிழ் கவிதையை நீங்கள் காணலாம்.(Sad Love Kavithai)
இந்த வலி தான் காதலா?
நெஞ்சுக்குழிக்குள் மாட்டி கொண்டு
நித்தமும் வலியை கூட்டுறா?
பஞ்சு போன்ற என் இதயத்தில்
படுத்துறங்கி நீ பாடாய் தான் படுத்துறா …
என்ன ஆனேனென தெரியாமலே
என்னென்னமோ மனசுக்குள்ளே தோணுது…
சும்மா இருந்தாலும் உணர்வை
சுருப்பி கொண்டு தான் போகுது…
இந்த வலி தான் காதலா?
இந்த பலியில் நான் காலியா?
மலர் போல மனசை மாத்துறா
மரண வலியை நீயே கூட்டுறா?
பலர் பால் இருந்த அன்பை
பரிசா மொத்தமா கேட்குறா?
எல்லாம் இழந்தும்
எல்லாமுமாய் நீயே நிக்குறா?
நல்லாயிருந்த என் உணர்வை
நயவஞ்சகமா பிடுங்கி தொலைக்கிறா?
இந்த வலி தான் காதலா?
இந்த பலியில் நான் காலியா?
தூக்கத்தை திருடி தொலைக்குறா
இரவை பாதியா சுருக்குறா ?
உறக்கத்தை மொத்தமாய் கலைத்து
பகலெல்லாம் கனவு காண பழக்குறா?
எல்லாம் இருந்தும்
எதுவுமே இல்லாதது போல தோணுது…
எல்லாமுமாய் இருக்க நீ எப்போ வர வாயென
என் உள்ளமும் இங்கே துடிக்குது…
இந்த வலி தான் காதலா?
இந்த பலியில் நான் காலியா?
வீதியில் எல்லாம் நீயே நிக்குறா?
விசித்திரமா மறைந்தும் போகிறா?
விதி கொடுத்த வாழ்வை
உன்னுடன் களிக்க சொல்கிறாய்…
எல்லாம் தெரிந்தும்
கண்மூடி குதிக்கிறேன்.
உண்மை காதல் நீ யென்று
உள்ளம் உருகி அழைக்கிறேன் …
இந்த வலி தான் காதலா?
இந்த பலியில் நான் காலியா?
🔍 இந்த கவிதையின் அர்த்தம்
இந்த கவிதை காதலின் இனிமையையும் வலியையும் ஒன்றாக வெளிப்படுத்துகிறது.ஒரு மனிதன் காதலில் விழும்போது, அவன் வாழ்க்கை முழுவதும் மாறிவிடுகிறது.
- தூக்கம் கலைந்து போகிறது 😔
- மனசு அமைதியை இழக்கிறது 💔
- ஒரே மனிதன் தான் உலகமாக மாறுகிறான் ❤️
இந்த கவிதை, காதல் எப்படி ஒரு இனிய வலியாக மாறுகிறது என்பதை ஆழமாக சொல்லுகிறது.
மேலும் அழகான காதல் கவிதைகள் படிக்க 👇
💖 காதல் கவிதை தமிழ் | Heart Touching Love Kavithai Tamil
💖 முன்னுரை (Introduction) காதல் என்பது ஒருவரை நினைத்துக் கொண்டே வாழ வைக்கும் ஒரு இனிய உணர்வு 💖,நித்தம் நித்தம்…