jesus kavithai (4)
பிறந்தார் பிறந்தார்
மாட்டு தொழுவத்தில்
மரி மகன் பிறந்தார்
மானிடர் வாழ்வில் ஒளியேற்ற
மண்ணில் வந்து பிறந்தார்
கடவுளின் மகனே உரு கொண்டு
நம்மில் இங்கு கலந்தார்
அமைதியை உலகில் விதைத்திட
அன்பும் கருணையும் நம்மில் மிளிந்திட
எளியோருக்கும் நற்செய்தி கிடைத்திட
தீமைகள் மண்ணோரில் குறைந்திட
மாசற்ற வாழ்வு நம்மில் பிறந்திட
மரிமகனாய் மண்ணில் வந்துதித்தார்
மலரென தேவனின் திருமகன்…
மகிழ்ச்சி உலகில் நிறைந்திட
பாவம் நம்மில் குறைந்திட
ஏற்றதாழ்வு இனி இல்லையென உணர்ந்திட
ஏக்கம் கொண்டோம் கடவுளை கண்டிட
எளிய வாழ்வு நம்மில் பிறந்திட
ஏழையின் நாயகனாய் வந்துதித்தார்
ஏசு என்னும் பெரு மகன்…
பூமியில் புனிதம் மலர்ந்திட
புண்ணிய பூமியாய் பிறந்திட
எளியோரின் வாழ்வு சிறந்திட
இயலாமை இனி இல்லை என்றாகிட
இறை உணர்வு எம்மில் கலந்திட
காவிய நாயகனாய் வந்துதித்தார்
கடவுளின் ஒரே மகன்…


Christmas kavithai in Tamil, Christmas kavithaigal, God Kavithai, god kavithai in tamil, jesus kavithai, jesus kavithai in tamil, Jesus Kavithai tamil, Jesus Kavithaigal in tamil. Jesus birth Kavithai in Tamil, kavithai about jesus in tamil, kiristhu pirapu kavithai, Kiristhu prappu Kavithai in Tamil, tamil kavithai, இயேசு கிறிஸ்து பிறப்பு கவிதை, இயேசு பற்றிய கவிதை, இயேசுவின் அன்பு கவிதை, ஒளிவிழா கவிதைகள், கிறிஸ்து பிறப்பு கவிதை, கிறிஸ்து பிறப்பு கவிதைகள், கிறிஸ்மஸ் கவிதை தமிழில், பாலன் பிறப்பு கவிதை, விடியல் தந்த கிறிஸ்து பிறப்பு கவிதை

