A peaceful and artistic representation of the birth of Jesus Christ in a manger, designed for a Christmas Kavithai post.

கிறிஸ்து பிறப்பு கவிதை-5 | Christmas Kavithai in Tamil

குடிலில் பிறந்த தேவனே

இதய குடிலில் மலர்வாயோ

மடியில் தவழ்ந்த மரிமகனே

மனதுள் குடி வருவாயோ!…

தாவீது குலத்தை அலங்கரிக்க

தரணி வந்த மன்னவனே

நன்றியோடு நினைக்கிறோம்

நாதா என்னில் மலர்வாயோ!…

குழந்தை வடிவம் கொண்ட

இறைமகன் நீரன்றோ

இதயம் திறந்து அழைக்கிறேன்

இதய தோட்டத்தில் பூக்க வருவாயோ!…

பாவ இருளை போக்கிடவே

பரம்பொருள் மண்ணில் வந்து பிறந்தாயோ

பாவி என்னை இரட்சித்து

பாலகனாயென் நெஞ்சில் பிறப்பாயோ!…

என்றும் ஏங்கி நிற்கும்

ஏழை நான் அன்றோ

காத்திருக்கும் என்னில்

வாழ்வது அவரன்றோ!…

Subscribe to Gnana Selvam Kavithaigal
Subscribe to Gnana Selvam Kavithaigal

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!