மௌனம் பேசியதே

mownam pesiyathae Best Romantic Novel Chapter 15

மௌனம் பேசியதே|EP-15|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! தோழிகள் முன்பு சங்கிலியை அசிங்கப்படுத்தும் பல்லவி. பல்லவியின் செயலால் நொறுக்கி போன சங்கிலி.                                பல மணி நேர போராட்டத்திற்கு பின் கண் திறந்தான். அந்த ஆக்ஸிடென்ட் ஆன இளைஞன். சுற்றி நின்ற டாக்டர்கள உள்பட ஊரே சந்தோஷப்பட்டது. அதிலும் உறவுகள் வந்து பல்லவியின் கையை கட்டி கொள்ள பல்லவி நெஞ்சுருகி போனாள்.         எல்லாரும் போய் அவள் தனிமையாய் நின்று கொண்டிருந்த போது அருகில் வந்த அவள் தோழிகள்.        ” […]

மௌனம் பேசியதே|EP-15|Best Romantic Novel Read More »

mownam pesiyathae Best Romantic Novel Chapter 14

மௌனம் பேசியதே|EP-14|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! சங்கிலியை ரத்தம் கொடுக்க அழைக்கும் பல்லவி. வந்தவனின் கோலம் கண்டு கிண்டல் செய்யும் அவள் தோழிகள்.                      “வாங்க சங்கிலி… மீன் கொண்டு வந்துட்டீங்களா? “ என்றவாறே வெளியில் வந்தவனிடம் கையில் இருந்த மீன்பார்சலை தந்தவன்.          “அப்போ கிளம்புறோம். “          “என்ன அவசரம் உள்ளால வந்துட்டு போங்க…”         “இல்லங்க. கடையில் வேலை நிறைய இருக்கு மீன் கேட்டீங்க. கொடுத்தாச்சுல கிளம்புறோம்.” என உடனே கிளம்பி விட… மீனோடு உள்ளே வந்தவனிடம்

மௌனம் பேசியதே|EP-14|Best Romantic Novel Read More »

mownam pesiyathae Best Romantic Novel Chapter 13

மௌனம் பேசியதே|EP-13|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! பல்லவி தங்கியிருக்கும் வீட்டிற்கு மீன் கொண்டு வரும் சங்கிலி. தோழிகள் முன் வைத்து அவனை திட்டும் பல்லவி.                          உள் செல்லும் பல்லவியின் பின் முதுகை வெறித்தவன்.          “டவுண் வரை அர்ஜென்டா போகணும்டா. அதான் கேட்டேன். இல்லனா நாளைக்கு கூட எடுத்திருக்கலாம்.”            “ஏன்?… ஏண்ட்டா இப்படி இருக்கா. உன் பொருளை கேட்க காரணம் எதுக்கு சொல்லுறா? நீ கேட்காமலே கொண்டு வந்து கொடுத்திருக்கணும். வாங்கின பொருளை கொண்டு கொடுக்கணும்ணு அவங்களுக்கு

மௌனம் பேசியதே|EP-13|Best Romantic Novel Read More »

mownam pesiyathae Best Romantic Novel Chapter 12

மௌனம் பேசியதே|EP-12|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! சங்கிலியின் கடைக்கே விக்கியோடு வரும் பல்லவி? இணைந்து வரும் அவர்களால் மனம் நொந்து போகும் சங்கிலி.                           துள்ளலோடு வந்து கொண்டிருந்த இருவரையும் பார்த்த சங்கிலி சட்டென தான் செய்து கொண்டிருந்த வேலையை போட்டு விட்டு எழுந்து விட்டான். என்ன தான் அவள் தனக்கு இல்லை என தெரிந்தாலும் அவளை இன்னொருவனோடு பார்க்கும் சக்தி இன்றி சிலையாக நின்றுக் கொண்டிருந்தவனை விக்கி பார்த்து விட ,          “ஏய்!… மீன்காரன். காலையில மீன்

மௌனம் பேசியதே|EP-12|Best Romantic Novel Read More »

mownam pesiyathae Best Romantic Novel Chapter 11

மௌனம் பேசியதே|EP-11|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! சங்கிலியிடம் மீன் கேட்கும் பல்லவி. அவனை மீன் காரன் போல நடத்தும் அவள் நடவடிக்கையால் கொதித்து போகும் ரவி. அடுத்து நடப்பது என்ன?                        ” ஐஸ்சு… எவ்வளவு நாளுக்கு பிறகு நல்ல சாப்பாடு சாப்பிடுறேன் தெரியுமா? அங்க சாப்பாட்டுல உப்பு உரப்பு எதுவுமே இருக்காது. நாக்குக்கு ருசியே இருக்காது. சாப்பிடணுமேனு சாப்பிடுவேன். ஆனா இன்று தான் அத்தை கைமணத்துல வயிறு நிரம்ப சாப்பிட்டேன்.”              சொல்லி கொண்டே ஐஸ்வரியாவோடு கை அலம்ப

மௌனம் பேசியதே|EP-11|Best Romantic Novel Read More »

mownam pesiyathae Best Romantic Novel Chapter 10

மௌனம் பேசியதே|EP-10|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! டாக்டர் படிப்பு முடிந்து ஊருக்கு வரும் பல்லவி. அவள் தோளோடு தோள் உரிசி வரும் அந்த இளைஞன் யார்?               பல்லவியின் தோளை ஒட்டிக் கொண்டு இறங்கிய அந்த ஸ்மாட்டான இளைஞனை கண்டதும் சங்கிலியின் மனது பொடிய ஆரம்பித்தது. ஏன் என்று அவனுக்கு கூட தெரியவில்லை. உயிர் வலி எடுத்தது என்னவோ உண்மை தான். ஆனால் காட்டி கொள்ளாமல் சிரித்து கொண்டே அவன் நிற்க,     பொறுக்க முடியாமல் ரவிதான் கொட்டிவிட்டான்.     “என்னடா?…

மௌனம் பேசியதே|EP-10|Best Romantic Novel Read More »

mownam pesiyathae Best Romantic Novel Chapter 9

மௌனம் பேசியதே|EP-9|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! பல்லவியின் மேல்படிப்புக்கு உதவும் சங்கிலி. சங்கிலியின் மனதை புரிந்து கொள்வாளா பல்லவி ?                        முதல் நாள் பல்லவியை மனைவி ஏற்று கொள்ளவில்லை என எந்த மரத்தடியில் அழுது கொண்டிருந்தாரோ அதே மரத்தடியில் தான் இன்றும் பாண்டி இருந்தார். ஆனால் இன்று தூரத்தில் வரும் சங்கிலியை பார்த்து கொண்டே தான் இருந்தார்.           அவனை பார்க்க கூச்சமாக தான் இருந்தது. காரணம் அன்று அவனை வாய்க்கு வந்த படி பேசிவிட்டார் தான். பாதுகாப்பாய் இருப்பான்

மௌனம் பேசியதே|EP-9|Best Romantic Novel Read More »

mownam pesiyathae Best Romantic Novel Chapter 8

மௌனம் பேசியதே|EP-8|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! படிப்பில் தன்னை நிரூபிக்கும் பல்லவி. அவளுக்கு கிடைக்கும் பாராட்டும் பரிசாலும் வாய் பிளந்து நிற்கும் கமலம். அடுத்து நடந்தது என்ன?                      இது நடந்து இரண்டு வாரம் சென்றிருக்கும் அந்த இரண்டு வாரத்தில் பல்லவியின் பேச்சு தான் ஊர் முழுவதும் பரவி இருந்தது. ஊருக்குள்ளே இதுவரை வராதவர்கள் எல்லாம் வந்து விட்டு சென்றனர். பல்லவி மனதால் சந்தோஷமாக இருந்தாள். யாரிடமும் தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளாவிட்டாலும், இரவில் தாயோடு பேசினாள். ஊரில் ஒவ்வொருவரும்

மௌனம் பேசியதே|EP-8|Best Romantic Novel Read More »

mownam pesiyathae Best Romantic Novel Chapter 7

மௌனம் பேசியதே|EP-7|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! சங்கிலி மனதில் தவறான எண்ணத்தை புகுத்திய கமலம். அது உண்மை என நம்பி பல்லவியை பின் தொடரும் சங்கிலி. இனி நடப்பது என்ன?                .     ஒரு நாளும் இல்லாமல் சங்கிலி மிக நெருங்கி வருவது போல் உரைக்க பயத்தில் நடையின் வேகத்தை கூட்டினாள் பல்லவி. அவன் அவளுக்கு ஒரு சில உதவிகள் செய்திருக்கிறான் தான். அதற்காக அவன் நல்லவன் லிஸ்டில் எல்லாம் அவளால் எடுக்க முடியவில்லை. .     தேவையில்லாமல் அவனுடன் நட்பை வளர்த்துக்

மௌனம் பேசியதே|EP-7|Best Romantic Novel Read More »

mownam pesiyathae Best Romantic Novel Chapter 6

மௌனம் பேசியதே|EP-6|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! அத்தைகாரியின் கொடுமைக்கு ஆளாகும் பல்லவி . அவளை காப்பாற்ற வந்தானா சங்கிலி?                  இரவு வெகுநேரமாகியும் சங்கிலிக்கு தூக்கம் வரவே இல்லை. இவ்வளவு உதவி செய்தும் ஒரு வார்த்தை பேசவில்லையே. பல்லவியின் பாராமுகம் தான் நியாபகத்தில் வந்தது. எங்கெல்லாம் அலைந்து திரிந்து அந்த மாட்டை கண்டுபிடித்து அவளையும் அவள் மாட்டையும் பத்திரமாய் கொண்டு சேர்த்தேன். அன்று தான் அதிர்ச்சியில் இருக்கிறாள் என்று நினைத்தேன். ஆனால் மூன்று நாளான பின்பு கூட ஒரு நன்றி சொல்ல

மௌனம் பேசியதே|EP-6|Best Romantic Novel Read More »

error: Content is protected !!