வணக்கம் வாசகர்களே!
ஓவியா தன் திருமணத்தின் கடைசி நொடியில் தவிப்போடு நிற்கிறாள். மகேந்திரனோடு அவள் வாழ்வா? முகுந்தனோடு அவரின் பயணமா? தெரிஞ்சிக்க பதிவுக்குள்ள போவோம்.
இதற்கு மேல் இந்த அவஸ்தை தனக்கு வேணாம் என முடிவெடுத்தவள் சட்டென பீரோவை திறக்க, அவளையே பார்த்து கொண்டிருந்தவள் இதயமோ தாறுமாறாய் துடிக்க தொடங்கியது.
ஆரம்பத்தில் நிதானமாக தேடியவள் நேரம் ஆக ஆக வெறியோடு தேட ஆரம்பிக்க, திலகாவுக்கு நெஞ்சம் எகிறி துடித்து வெளி வந்து விடுமோ என்கிற அளவில் இருந்தது.
பிரோவில் இருந்த அத்தனை பொருட்களையும் வெளியில் எடுத்தாகி விட்டது. ஆனால் அவள் தேடிய அந்த காகித கட்டு அவளுக்கு கிடைக்கவில்லை.
“எங்க போச்சு. இங்க தானே வச்சேன். நேற்று இரவு கூட திலகாளுட்ட காட்டிட்டு இங்க கொண்டு தானே வச்சேன்.” திரும்ப திரும்ப யோசித்து பார்த்தாள். இதில் வைத்த நியாபகம் தான் இருந்தது.
“இங்க வைத்தது எங்கே போனது…”
மனது பேதலிக்க ஆரம்பித்தது. அவள் தவற விட்டது சின்ன பொருளா? அவள் வாழ்க்கையை அல்லவா? எங்கே போய் விட்டது. பதட்டத்தில் எல்லாவற்றையும் வீசி எறிந்தாள். பைத்தியம் பிடித்து விடும் போல் இருந்தது அவளுக்கு.
அவளை பார்த்து கொண்டிருந்தவள் இதயமோ தாறுமாறாக அடிக்க தொடங்க, அவளையே கிலி பிடித்தவள் போல் பார்த்தாள். கூடவே தன்னிடம் காட்டிய பொருள் காணாமல் போய் இருக்கிறது. அப்படியும் தன் மேல் சிறிது கூட சந்தேகப்படாத தோழியை பார்க்க பார்க்க குற்ற உணர்வு வந்தது திலகாவுக்கு.
சக்கரவர்த்தியை பற்றி தெரியும். அப்படியும் அவர் வார்த்தையில் நம்பிக்கை வந்து இதை எடுத்து கொடுக்க துணிவாள் என்று அவளுமே நினைக்கவில்லை. எப்படி அவர் வார்த்தையை நம்பி கொடுத்தாள். பொய் சொல்லி வாங்கி கொண்டு போய் அந்த மனிதர் இவளை என்னவெல்லாம் செய்ய திட்டமிட்டிருக்கிறாரோ தெரியவில்லையே.
திலகா பீதியில் இருந்த நேரம்,
தலையை பிடித்தவாறு அப்படியே தரையிலே அமர்ந்து விட்டாள் ஓவியா. திலகாவுக்கு ஆறுதல் சொல்ல வாய் எழவில்லை. ஆறுதல் சொல்லி இந்த நொடி அவளை தேற்ற முடியாது என்பது அவளுக்கு தெரியும் தான். ஆனாலும் உடைந்திருப்பவளை இப்படி பார்க்க முடியவில்லையே. இப்போது நான் என்ன செய்வேன்.
திலகா தவித்து போனாள். ஆனாலும் பேசும் துணிவு அவளுக்கு கடைசி வரை வரவே இல்லை.
எவ்வளவு நேரம் உறைந்து போய் அதில் அமர்ந்தாளோ தெரியவில்லை. வெளியில் இருந்து குரல் கொடுத்த பின் தான் நிகழ்காலம் வந்தாள். ஆனால் நிகழ்காலம் நிகழ்காலம். அவளுள் பயம் தலைவிரித்து ஆடியது. அந்த காகிதங்கள் இல்லாமல் மகேந்திரனை பற்றி எப்படி சொல்ல முடியும். அந்த சாட்சியங்கள் இல்லாமல் இந்த திருமணத்தை எப்படி நிறுத்த முடியும். அப்படி நிறுத்த முடியாமல் போனால்…
நினைவே அவளை உயிரோடு வதைக்க…
வெளியில் நிற்போருக்கு பதில் கொடுக்க கூட முடியாமல் அமர்ந்திருந்தாள். அவள் சூழலை புரிந்து கொண்டு திலகா தான் குரல் கொடுத்தாள்.
“ இதோ… இதோ… இப்போ வந்திடுவா?”
அவளின் பேச்சுக்கு பின் இதற்கு மேல் உள்ளே இருக்க முடியாது என்பது ஓவியாவுக்கு புரிந்து போனது. ஆனாலும் பீரோவில் வைத்தது எப்படி மாயமானது. மனது குடைய மெல்ல எழுந்து கலைந்து கிடந்த ஒப்பனையை சரி செய்தவாறு வெளியில் கிளம்ப ரெடியானாள்.
கண்களை ஒருமுறை இறுக மூடித் திறந்தாள்.
“எது நடப்பது என்றாலும் நடக்கட்டும். ஆனால் என் முன் என் முகுந்தனை மட்டும் கொண்டு நிறுத்தி விடாதே.”
வேண்டியவாறு தான் திறந்தாள்.
என்ன நினைத்தாரோ கடவுள் இதற்கு மேல் இவளை சோதிக்க வேண்டாம் என்றே அவனை அவள் கண்களில் காட்டவே இல்லை. ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடங்களுக்கு நகரும் போதெல்லாம் அவள் கண்கள் சுற்றி சுழன்றன.
அவனை காணவில்லை. என்னவோ மனசு ஆசுவாசமாக இருந்தது.
முன்னே அவள் குடும்பம் சந்தோஷத்தில் நின்றது. தாயின் முக மலர்ச்சியையும் தந்தையின் நெகிழ்வையும் கண்ணுக்குள் அடக்கி கொண்டாள்.
இது இன்னும் சில நொடிகளில் கலைய போகிறது. சூழலே இங்கு மாற போகிறது. நினைவே நெஞ்சை அடைத்தது. முன்னால் ஒடி வந்து கட்டி கொண்டு தன் சந்தோஷத்தை வெளிப்படுத்திய தங்கைகளை பார்த்தாள்.அணைத்து விடுவித்தவள் முகமோ மாறத் தொடங்கியது. இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த முகமும் இருளை பூசிக் கொள்ள போகிறது. இவர்களின் சந்தோஷத்தை அழிக்க மனமில்லை. ஆனால் அதற்காக அந்த மகேந்திரன் தாலியை வாங்க முடியாதே. நொடிகள் எல்லாம் திக் திக் என்று தான் சென்றது.
திருமணத்தை நிறுத்தி தான் ஆக வேண்டும். ஆனால் எப்படி? எப்படி? என்ன சொல்லி நிப்பாட்டுவது. சாட்சி இல்லாமல் வாய்மொழியாக சொன்னால் இவர்கள் நம்புவார்களா? நிச்சயம் மாட்டார்கள். ஒரு சிலர் முகுந்தனுக்காக பேசுவதாக நினைப்பார்கள். வேறு சிலர் இவளை தவறாக பேசுவார்கள். இன்னும் சிலர் இவ்வளவு நாள் எங்க போனாய் என்பார்கள். ஆக மொத்தத்தில் என் குடும்பம் தலைகுனிய போகிறது. நான் அனைவர் முன்பும் அவமானபட்டு நிற்க போகிறேன்.
எல்லாம் இந்த முகுந்தனால். இவன் மட்டும் இங்கு வரவில்லை என்றால் அன்றே தன் தாயிடம் சொல்லி இருப்பாள். சொல்லி விட வேண்டும் என்று தானே மெட்ராஸில் இருந்து வந்தாள். அவளின் தயக்கம் இரண்டு நாளை நகர வைத்தது என்றால் இவனின் வரவு இரண்டு நாளை தள்ளிக் கொண்டு போய்விட்டது. அதிலும் ஆதாரம் கிடைத்ததும். அவனை நான்கு பேர் மத்தியில் வைத்து நாக்கை பிடுங்கி அனுப்ப வேண்டும் என்று அல்லவோ இவள் காத்திருந்தாள்.
ஆனால் விதி இவள் பல்லை பிடுங்கி அல்லவா உட்கார வைத்து விட்டது.
எப்படியும் அவள் மறுத்து பேசினால் அதற்கு கூட அந்த சக்கரவர்த்தி அழகாக திரைகதை எழுதி வைத்திருப்பார். இவளிடம் தோற்கும் ரகமா அவர். ஊரையே நம்ப வைக்கும் அளவு அவளுக்கு எதிராக பேச ரெடியாக எதையாவது வைத்து இருப்பார்.
“இப்போது என்ன செய்வது. கடவுளே எனக்கு ஒரு வழி காட்ட கூடாதா? இந்த இக்கட்டில் இருந்து என்னை காப்பாற்றி விட கூடாதா?”
மனம் முழுதும் பயத்தில் வேண்டத் தொடங்கினாள். அங்கு இவளின் அவஸ்தையில் ஒருவரும் இல்லாததால் ரொம்ப ரொம்ப உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருந்தனர் அனைவரும். வருபவர்களை வரவேற்பதும் அவர்களுக்கு குடிக்க ஏதாவது கொடுப்பதும் என எழிலரசி பிஸியாக இருக்க, அரிசந்திரனோ முகூர்த்தத்துக்கான வேலையில் ஐயருக்கு உதவியவாறு இருந்தார். தங்கைகள் உற்சாகமாக அவர்கள் வயது தோழிகளோடு நின்று பேசிக் கொண்டிருந்தனர். நளன் ஒரு பக்கம் வேலையாகவும் மறுபக்கமாய் கோபால் தண்ணீர் பாட்டில்களை அடுக்கி கொண்டும் நின்றிருந்தனர்.
வாசலை தாண்டிய பகுதியில் ஊர் பெரியவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களின் மறுபுறம் ஊரே திரண்டு நிற்கும் என்பது அவளுக்கு தெரியும் . அவளை சுற்றியும் ஒரு கூட்டம் நின்றது. அத்தனை பேரையும் ஒரு வித இயலாமையோடு தான் பார்த்தாள்.
“இவர்கள் முன் பேச வேண்டும். என்னால் பேச முடியுமா?”
அவள் கை கால்கள் நடுங்கின. நேற்று இரவு வரை விதி இப்படி ஒரு இடத்தில் கொண்டு போய் நிறுத்தும் என அவள் நினைக்கவில்லை. சாட்சியம் இருக்கிறது தைரியமாக பேசி விடலாம் என்று தான் நினைத்தாள். ஆனால் அது தொலைத்த நொடியில் இருந்தே பயமும் பதட்டமும் அவளுடன் ஒட்டி கொண்டு விட்டது. ஆனாலும் பேச வேண்டும். பேசியே ஆகவேண்டும். மனதுக்கு சொல்லி கொண்டாள். அப்படி பேசினால் என் பேச்சு எடுபடுமா? இவர்கள் என்னை நம்புவார்களா?
எப்படியும் சக்கரவர்த்தியும் அவர் கூட்டமும், மகேந்திரனும் அவர்கள் கூட்டமும் என்னை சும்மா விடப் போறதில்லை.
எல்லாரும் எனக்கு எதிராய் பேசும் போது என் பேச்சு சபையில் எடுபடுமா? எடுபடவில்லை என்றால் என்ன செய்ய போகிறாய் ஓவியா. பெற்றோரின் கண்ணீருக்கு பயந்து மகேந்திரன் தாலியை வாங்க போகிறாயா? அல்லது அது முடியாது என்று முடிவெடுத்து இங்கு இருந்து ஒடி போக போகிறாயா?
அவளால் அவன் தாலியை வாங்க முடியாது என்பது நிச்சயம். ஆனால் ஒடி போவது. தாய் தந்தை, தங்கைகளை விட்டு விட்டா… முடியுமா அவளால்… கடவுளே… எனக்கு ஏன் இந்த சோதனை?.
பெண் மனது தவியாய் தவித்தது. இவள் தவிப்பு தெரியாமல் முகூர்த்தத்துக்கான வேலை அங்கு படுவேகமாக நடந்தேறிக் கொண்டிருந்தது. ஆள் ஆளுக்கு பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தனர். அருகில் வந்த எழிலரசி மகளின் ஒப்பனைகளை சரி செய்தாள். தாயின் மலர்ந்த முகத்தை ஒருமுறை கூட பார்த்தாள். கண்ணீர் கட்டி கொண்டது. அதே நேரம் அறையில் இருந்து ஒரு சாதாரண உடையில் வெளிப்பட்டாள் திலகா. மனசு நளனை தேடியது. பாரமாகி போன உண்மையை அவனிடமாவது கொட்ட வேண்டும் போல் இருந்தது. ஆனால் வெளி வந்தும் அவனை காண முடியவில்லை. வெளியில் செல்ல, அவள் உதவிக்கு யாரும் இல்லை.
கண்களை அலை பாய விட்டு கொண்டு நின்ற தோழியை கண்டதும் அவளை கூட்டி கொண்டு தன் அருகில் நிப்பாட்டி கொண்டாள் ஓவியா.
“நான் எதுக்குடி…”
அடி குரலில் கேட்டாள் திலகா.
“நீ இதுல தான் நிக்கணும். பிரச்சினை முடிகிற வரை இதை விட்டு நகர கூடாது. எனக்குணு சப்போட் பண்ண நீ ஒருத்தியும் தான் இருக்கா…”
என்றவளை நிமிர்ந்து பார்த்தவள்,
“அப்படினா பேச போறியா?”
“ம்… பேசி தான் ஆகணும். என்னால எந்த காரணம் கொண்டும் அந்த மகேந்திரனை கட்டிக்க முடியாது.”
அவள் தீர்க்கமாக சொன்ன நொடி, உள்ளே வந்த நளன்,
“மாப்பிள்ளை வீட்டுல இருந்து கிளம்பிட்டாங்களாம்.”
என சொல்ல, சுற்றி ஒருமுறை பார்வையை சுழல விட்டாள். இது தான் சரியான நேரம் சொல்லி விடுவோம்.
தீர்மானித்து விட்டாள். இதற்கு மேல் நேரம் கடத்துவதில் அர்த்தம் இல்லை என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. ஆனால் கூப்பிட கூட வாய் எழவில்லை. இத்தனை வருட வாழ்வில் தாயின் முகத்தில் இப்படி ஒரு மலர்ச்சியை அவள் என்றுமே பார்த்தது இல்லை.
கோசலையோடு எதையோ பேசிக் கொண்டிருந்தவளை ஆர்வமாக பார்த்தாள். பேசி முடியட்டும். அழைக்கலாம். என காவல் இருந்தாள். நல்லவேளை முகுந்தனின் குடும்பம் என்று யாரும் இல்லை அது ஒன்றும் தான் அவளுக்கு இப்போது ஆறுதல்.
மெல்ல தன்னை சாமாளித்து கொண்டு
“அம்மா…”
என்று அழைத்தாள் உணர்ச்சியற்ற முகத்தோடு, திலகாவுக்கு தான் பதட்டம் அதிகமாகி போனது. குருக்கள் கேட்ட பொருட்களை எடுத்து கொண்டு வர கோசலையிடம் சொல்லி கொண்டிருந்த எழிலரசி மகளின் அழைப்பு கேட்டு, திரும்பி பார்க்க,
“இங்க வாம்மா…”
என கண்களால் அழைத்தாள் ஓவியா.
“என்னம்மா… ஏதாவது குடிக்க வேணுமா?”
என்றவாறு அருகில் வந்த தாயிடம், உமிழ்நீரை விழுங்கி தன்னை நார்மலாக்கி விட்டு பேச தொடங்கும் போது,
“மாப்பிள்ளை வந்தாச்சு…”
பெரியவர் ஒருவர் குரல் கொடுக்க, ஹாலில் இருந்த அனைவரும் முன் வாசலுக்கு விரைந்தனர். சிறிசு, பெரிசு, இளசு என எல்லாரும் வாசலுக்கு விரைந்து விட,
“நான் இப்போ வாரேம்மா. பூ ஆரம் மாற்றணும்.”
சொன்ன தாய் அதிவேகமாக நகர்ந்து விட, ஓவியா,
“அம்மா… அம்மா…”
என்ற அவளின் அழைப்பு காற்றில் தான் கரைந்து போனது.
“சே…”
என தன்னை நொந்தவள், செய்வதறியாது திகைத்து நின்ற போது, மனது பேதலித்து திலகாவின் கையை கட்டியாக பிடித்து கொண்டது.
அணிவகுத்து நின்ற உயர்ரக காரில் முதல் காரில் இருந்து பட்டு வேஷ்டி சட்டையோடு கழுத்து பூ மாலையோடும் கம்பீரமாக இறங்கினான் மாப்பிள்ளை. அவனை தொடர்ந்து அவன் குடும்பம் உற்றார் உறவினர் என ஆள் ஆளுக்கு ஒவ்வொரு வாகனத்தில் இருந்தும் இறங்கி வந்து மாப்பிள்ளையை சூழ்ந்து நிற்க, வாத்தியங்களும், மேள தாளங்களும் முழங்க தொடங்கின.
வெளியில் ஆரவாரம் உச்சத்திற்கு செல்ல, உள்ளே ஒவியா திலகாவின் நிலையோ ரொம்ப மோசமானது. ஓவியா முகம் இறுக்கத்திற்கே சென்று விட்டது.
“இப்போ என்னடி பண்ணுறது?”
திலகா தான் கேட்டாள்.
“சொல்லி தான் ஆகணும்?”
“அது தான் எப்படி?”
“எனக்கும் தெரியல… ஆனா தைரியத்தை வரவழைச்சி பேசி விட வேண்டியது தான். என்னால அந்த பொம்பளை பொறுக்கியோட தாலியை எல்லாம் வாங்க முடியாது.”
எனும் போதே நேற்று முகுந்தனிடம் உன்னை விட அவன் சிறந்தவன் என்று சொன்ன நியாபகம் வர , கண்கள் கட்டுபாட்டை மீறியது.
அதே நேரம்,
மாப்பிள்ளையின் அருகில் மிக மிக கம்பீரமாக நின்ற சக்கரவர்த்தியை நெகிழ்வோடு பார்த்தான் சுந்தரம். அவன் மனதில் அப்படி ஒரு ஆனந்தம்.
“நான் என்ன சொன்னாலும் தட்டாம அப்படியே செய்துச்சிடா அந்த புள்ள. அந்த புள்ளையோட கல்யாணத்துல எந்த குறைவும் வந்திட கூடாது. நீ எப்படியாவது நரேன் எங்க இருக்கிறான்னு கண்டுபிடிச்சிடு. அவனை கண்டுபிடிச்சி கொண்டு வந்தா தான் இந்த புள்ளையோட வாழ்க்கையை என்னால காப்பாத்த முடியும். எவ்வளவு ரூபாய் செலவானாலும் பரவாயில்லை. மெட்ராஸ்ல இருந்து மொத்த ஆளையும் இறக்கு. கேரளா முழுசும் தேடு. இன்னும் மூணு மணி நேரத்துல அவன் எனக்கு வேணும்.”
சக்கரவர்த்தியின் வார்த்தை காதில் ரீங்காரமாய் ஒலிக்க, சாதித்து விட்டது போல நெஞ்சை நிமிர்த்து கொண்டு மாப்பிள்ளையின் அருகில் நின்ற சக்கரவர்த்தியை கண்ணில் ஒளியோடு பார்த்தான் சுந்தரம். மனது என்னவோ நிறைந்து போய் விட்டது அவனுக்கு.
அவனின் மன ஓட்டத்தை படித்தாரோ என்னவோ, இப்போது சக்கரவர்த்தி பார்வையும் அவனில் தான் விழுந்தது.
“வாடா.வா… நீ ஏன் ஒரமா போய் நிக்குறா? இந்த கல்யாணம் நல்லபடியா நடக்க நீ தான் காரணம். நீ ஒதுங்கி நின்னா எப்படி? முன்னால வா.” சுந்தரம் கை பற்றி இழுத்து அவர் அருகில் நிற்க வைத்து கொண்டார் சக்கரவர்த்தி. முதலாளியை நெகிழ்வோடு பார்த்தவன் அவரோடே நடக்க தொடங்கினான். உள்ளத்தில் புது உற்சாகம் தொற்றிக் கொண்டது.
அவர்களை எதிர் கொண்டு வந்து வரவேற்ற நரேன்.
“வாங்க… வாங்க…”
என இன்முகத்தோடு அழைக்க,
“ஒ…. நீங்க பெண் வீடா?”
கிண்டல் செய்தார் சக்கரவர்த்தி, அவரின் கிண்டலை ரசித்தாலும் அவர் முன் நெளிந்தவாறு நின்றவன் மனதிலோ…
“சொல்லு நரேன். நீ இப்படி விறைப்பா நிக்குறதுல இங்கு எந்த மாற்றமும் வர போறது இல்ல. நீ என் மகனுக்கு விசுவாசமான ஆளுனு எனக்கு தெரியும். இன்று மட்டும் எனக்கு விசுவாசமா இருந்திடு. எல்லாம் முகுந்தனுக்காக தான். அந்த எவிடென்ட் எங்க இருக்குணு மட்டும் எனட்ட சொல்லிடு. வேற நீ எனக்காக எதுவும் செய்ய வேணாம். நீ சொல்ல போற இந்த பதில்ல தான் இங்க மூன்று பேரோட வாழ்க்கையே இருக்கு.
முதன்முதலாக கனிவோடு பேசிய சக்கரவர்த்தியை நேற்று தான் பார்த்தான். இவருள் இவ்வளவு நெகிழ்வு இருக்குமா என்ற சந்தேகம் நேற்று இருந்தாலும் இந்த நொடி அப்படி எந்த சந்தேகமும் இன்றி மலர்ந்த முகத்தோடு வரவேற்றான்.
மாப்பிள்ளை ஊர்வலத்தை ஊரே வேடிக்கை பார்த்தது. குட்டி குழந்தைகளின் மெல்லிசைக்கு நடுவில் மாப்பிள்ளை தோரணையில் கம்பீரமாக மிக மிக கம்பீரமாக மிக மிக உற்சாகத்தோடு நடந்து வந்து கொண்டிருந்தான் முகுந்தன். அவனை பார்க்க பார்க்க அரிசந்திரனின் கண்கள் குளம் கட்டி கொண்டாலும் உதடு மலர்ந்தே இருந்தது. கையில் சந்தனம், பன்னீர், மாற்று ஆரம் பூங்கொத்து அடங்கிய ட்டிரேயோடு நின்றவர் மெல்ல படியில் இருந்து உற்றார் உறவினர், ஊர் பெரியவர்கள் புடைசூழ இறங்கினார். மனம் முழுவதும் நிம்மதியும் குதூகலமும் இருந்தது.
நேற்று இவர் தந்தை சக்கரவர்த்தி கொண்டு வந்து நீட்டிய ஆதாரங்களை பார்க்க பார்க்க அரிசந்தரன் இதயமோ சுக்கு நூறாக உடைந்து போய் விட்டது. ஒரு நொடி உலகமே சுழல்வதை நிறுத்தி விட்டது. அடுத்து என்ன செய்வது, என்ன செல்வது என்று தெரியாமல் தவித்து உடைந்து போய் அமர்ந்து விட்டார் மனிதர். அவரின் நிலைபார்த்து அருகில் வந்த சக்கரவர்த்தி,
“ உங்க மனசு புரியுது. இது எல்லாமே என்னால என்கிறதால இதை சரி செய்ய வேண்டிய பொறுப்பும் என்னுடையது தான். அதனால தான் உங்களை தேடி வந்திருக்கேன். இந்த திருமணம் நின்றால் நீங்க எந்த அளவு பாதிக்கப்படுவீங்க என்கிறது எனக்கு தெரியும். அதோட ஊர் முன்னால உங்க குடும்பம் அவமானப்பட்டு போகும். அது நடக்காம இருக்கணும்ணா அதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு. நீங்க நான் சொல்லுறதை கேட்டு தான் ஆகணும்.”
சொன்னவர் சற்று நிறுத்தி,
“நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். நாளைக்கு உங்க பொண்ணோட திருமணம் நிச்சயம் நடக்கும். மாப்பிள்ளை அந்த மகேந்திரன் இல்ல. என்னோட மகன். எந்த மகனுக்காக இது எல்லாம் செய்து உங்க மகள் வாழ்வு இந்த இடத்துல வந்து நிற்குதோ… அந்த மகனாலயே இதை நான் சரிப்படுத்துறேன். உங்களுக்கு அதுல சம்மதம் தானே…”
உடைந்து நின்ற அவர்களுக்கு அந்த நொடி மட்டும் அல்ல… சொன்னது போல் தன் மகனோடு வந்து இறங்கிய இந்த நொடியுமே சக்கரவர்த்தி தெய்வமாக தான் தெரிந்தார்.
மாப்பிள்ளை ஊர்வலம் அருகில் வந்து விட, நளன், கோபால், ஊர்தலைவர், இளைஞரணி தலைவர் உட்பட உற்றார் உறவினர் புடைசூழ, தன் வருங்கால மாப்பிள்ளையும் அவன் குடும்பத்தினரையும் பன்னீர் தெளித்து வரவேற்றான் அரிசந்திரன். மனம் முழுதும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அவரில் இருந்தது.
மாப்பிள்ளையின் கழுத்தில் கிடந்த பூமாலையையும் பூங்கொத்தையும் வாங்கி கொண்டு, அவர்கள் கொண்டு வந்த பூமாலையும், பூங்கொத்தையும் அவருக்கு அணிவித்தனர். கோபால் கரம் பற்றி பிடிக்க, முகம் எல்லாம் மகிழ்வோடு மேடையில் போய் அமர்ந்தான் முகுந்தன். ஊர் முணுமுணுத்தது. கடைசியில் உண்மை தெரிந்து ஓவியாவுக்கு கிடைத்திருக்கும் அற்புதமான வாழ்க்கையை நினைத்து மகிழ்ந்தது.
ஆரம்பத்திலே சக்கரவர்த்திக்கு அந்த கிராம மக்கள் மனதில் நல்ல அபிப்பிராயம் தான் இருந்தது. அது இப்போது இன்னுமே கூடியது. அப்புறம்.
தன் கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு சாதாரண ஊழியரின் திருமணத்திற்கு மூன்று நாளுக்கு முன்பே வந்து முதலாளி நிற்பது அதிசயம் என்றால். தவறாகி போன மாப்பிள்ளை தேர்வை கண்டுபிடித்து அவனுக்கு ஜெயில் வாழ்க்கையை பரிசளித்து விட்டு தன் ஒரே மகனை கொடுக்கும் அளவு போகும் போது ஊரார் புகழாமல் இருப்பார்களா?
ஆள் ஆளுக்கு புகழ்ந்து தள்ளினர்.
ஏழை அரிசந்திரன் அருகில் கம்பீரமாய் நின்ற சக்கரவர்த்தியை நெகிழ்வோடு பார்த்தார் தீனதயாளன். அதிலும் அவருடன் கைகுலுக்கி பேசிக் கொண்டிருந்த அவரை பார்க்க பார்க்க தயாளனின் மனதும் உதடும் விரிந்தது.
“அவனோட அப்பன்ட்ட மோதல் வந்தவுடனே நினைச்சேன். எனக்கு அடியில ஆப்பு வைக்க ரெடியாகிட்டான்னு. புள்ளையை பெத்து போட்டிருப்பானு பார்த்தா பொறுக்கியை பெத்து போட்டிருக்கான். நானும் வயசு கோளாறுல சின்ன சின்ன தப்பு பண்ணியிருப்பான். கட்டி வச்சா சரியாகிடுவான்னு நினைச்சா. ஊருக்கு பத்து பொண்ணுகளோட வாழ்க்கையில விளையாடியிருக்கான். முகுந்தன் மட்டும் நரேன் வழியா உள்ளால இறங்கலனா எனக்கு இந்த விசயம் தெரியாமலே போயிருக்கும்.
அந்த ரங்கசாமி வழியா தான் இவனோட அப்பன் கூட பழக்கம் உண்டாச்சு. எல்லாம் கிளப்புக்கு போன இடத்துல தான் பழக்கம். முகுந்தன் மேல உள்ள சின்ன மனஸ்தாபத்துல அதிகமா குடிச்சிட்டேன். அதை இவன் அப்பன் பயன்படுத்தி என் மனசை கறந்து என் வலியை தெரிஞ்சிட்டான். என்னமோ அவனே வந்து உதவுனதும் நானும் அதை கட்டியா புடிச்சிட்டேன். ஏழைங்க தன்மானம் உள்ளதுங்க. கொஞ்சம் மோசமா பேசினா ஒதுங்கிடும்னு என் தரத்தை தாழ்த்தி சில வார்த்தைகளை பேசினேன். நான் நினைச்சது போல அந்த பொண்ணும் ஒதுங்கிட்டா. மனசுல அதோட வாழ்க்கையை கெடுக்கல. அவள் தகுதிக்கு நல்ல வரனா தான் பாத்து கொடுத்திருக்கேன்னு கொஞ்சம் நிம்மதியா இருந்தா அந்த தறுதலை ஒரு கொலை கேஸ்லயும் மாட்டி இருக்குதாம். ஒரு பெண் விசயத்துலயும் மாட்டி இருக்காம். பெண் விசயத்துல சும்மா மாட்டல. இரண்டு பெண் குழந்தைக்கு அப்பா ஆகி அதுங்களை நட்டாற்றுல விட்டுட்டு இந்த தறுதலை இந்த பொண்ணு கழுத்துல தாலி கட்ட ரெடியாகியிருக்கான். அதுவும் நான் கொடுக்கிறதா சொன்ன பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு. ஏதோ ஒரு குடும்பத்துக்கு தவறு செய்றோம். அதுக்கு பிராயசித்தமா வச்சிடட்டும்னு கொடுத்தா பயபுள்ள அதை வாங்க என்னையே ஏமாத்தி இருக்கானுங்க. இங்க வந்த அன்று நைட் தான் அசோகன் வழியா தெரிஞ்சது.
“விட முடியுமா? அவனை விட முடியுமா?”
அதான் அவனை பக்காவா தூக்க பிளான் பண்ணி நானே இறங்க வேண்டியதா போச்சு. எனக்கு தெரியும். நரேன் மறைவுல இவனுக்கு எதிரா இறங்கி வேலை பாக்குறான் என்கிறது அந்த மகேந்திரனுக்கு தெரிஞ்சி போச்சுனு . எனக்கு தெரிஞ்சதால தான் நான் அவனை கண்காணிக்க சொன்னேன். நல்ல வேளை புடிச்சிட்டு வந்து என் குற்ற உணர்ச்சியை குறைச்சிட்டாங்க என் பசங்க. இனி இவனை வச்சே நான் செய்த தப்பை சரி பண்ணிடுவேன் தயாளன். அது இப்போ பிரச்சினை இல்லை. எனக்கு மனசுக்கு குற்ற உணர்வா இருக்கு. என்னால உனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாம போச்சு. என்னை மன்னிச்சிடு தயாளன்.
என் பையன் அந்த பொண்ணை உசுரை விட மேலா நேசிக்கிறான் தயாளன். அது கூட இங்க வந்து அந்த பொண்ணுக்காக கல்யாண வேலையை இழுத்து போட்டு செய்ய ஆரம்பிச்ச பிறகு தான் எனக்கு தெரிஞ்சிது. வயசு கோளாறுல இவளை தான் கட்டிப்பேணு பிடிவாதம் பிடிச்சி கட்டிட்டு அப்புறம் இவள் எனக்கு தோதா இல்லணு கழற்றி விட கூடாதுல . அதுனால தான் கொஞ்சம் கடுமையா நடந்தேன். ஆனா இந்த கிராமத்துக்கு வந்து அந்த புள்ளையோட குடும்பத்தோடு பழகுனதுல இருந்து, அப்படி அந்த பொண்ணு விட்டுட்டு போற பிள்ளை இல்லணும். என் மகன் அவளை விட்டு கொடுக்கிற அளவு விரும்பல என்கிறதும் தெரிஞ்சிகிட்டேன்.
ஆரம்பத்துல இது தெரியும் போது ரொம்ப குழப்பமா இருந்துச்சு. எப்போ அசோகன் மகேந்திரனை பற்றி அறிந்த விசயத்தை போன் பண்ணி சொன்னானோ அப்பவே நான் இந்த முடிவுக்கு வந்துட்டேன். இந்த பொண்ணு அவன் வீட்டு மகாலெட்சுமி இல்ல. என் வீட்டு மகாலெட்சுமினு. அப்பவே என் வீட்டு கல்யாணத்துக்கு நான் ரெடியாகிட்டேன். ராஜேந்திரனை வச்சே எல்லா வேலையும் வாங்கிட்டேன். ஆனா உனட்ட பேச தான் கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. மகேந்திரன் பற்றி உனட்ட பேசும் போது நீ காட்டிய ரியாக்ஷன் தான் நீ என்னை புரிஞ்சிப்பா என்கிற தைரியத்தை கொடுத்தது. அதான் இறங்கி செய்துட்டேன். இப்போ தான் மனசுக்கு நிறைவா இருக்கு
அவர் அப்படி உணர்ச்சி பொங்க பேசும் போது கூட தயாளனுக்கு நம்பிக்கை வரவில்லை சக்கரவர்த்தி மேல்,
ஆனால் சொன்னது போல, நரேனை பிடித்து அவனிடமிருந்து ஆதாரம் பற்றிய உண்மையை வாங்கி அந்த பெண்ணின் அறைக்குள் தானே போய் அந்த பேப்பர்ஸை கொண்டு காட்டிய பின் தான் அவர் மேல் இவருக்கு நம்பிக்கையே வந்தது. அதன் பின் இவரின் செல்வாக்கை பயன்படுத்தி, மகேந்திரனுக்கும் அவன் அப்பனுக்கும் சரியான பாடம் புகட்டி விட்டே வீட்டிற்கு வந்தார் தயாளன்.
அவர் வந்து சேரும் போது அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் பார்ட்டி ஹாலில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதை பார்த்து அதிசயித்து போனார். ஒரே இரவில் உறவை அழைத்து முகூர்த்த பட்டு நகை என எல்லாமே ரெடி பண்ணி விட்டார் சக்கரவர்த்தி. பல நாள் திட்டமிட்டு செய்தால் கூட இவ்வளவு நேர்த்தியாக ரெடி பண்ண முடியுமோ என்னவோ அவ்வளவு நேர்த்தியாக எல்லா வேலையையும் முடித்து வைத்திருந்தார். அதுவே இது அவர் நேற்று எடுத்த முடிவு அல்ல. அவர் சொன்னது போல கிராமத்துக்கு வந்த அன்றே எடுத்து விட்ட முடிவு என சொல்லாமல் சொன்னது.
நெகிழ்ந்து போய் நின்றவரையும் அவர் குடும்பத்தையும் தன் அருகில் அழைத்து சக்கரவர்த்தி நிறுத்திக் கொள்ள, மோனகாவும் சிரித்து கொண்டே தான் நின்றாள்.
உள்ளே…
ஒவியாவின் அருகில் இருந்த திலகாவுக்கு இருப்பு கொள்ளவில்லை. மாப்பிள்ளையை பார்த்து விட்டு வந்து வைஷ்ணவியும் காயத்ரியும் அவன் ஸ்டைல், அழகு, கம்பீரத்தை புகழ புகழ… அவனை பார்த்து விட வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. அவள் இன்னும் மகேந்திரனை பார்த்தது இல்லை அல்லவா? அதனால் மெல்ல சக்கரத்தை உருட்டிக் கொண்டு வெளி வந்தவள் மாப்பிள்ளையாக இருந்த முகுந்தனை பார்த்ததும் கண்கள் நொடி பொழுதில் விரிய, பார்த்தவள் மனது மலர்ந்து பனித்து விட்டது.
‘சார் நீங்களா?…’
அவளை மீறி வார்த்தை வெளி வந்தது. உள்ளம் அக்களிக்க, முகுந்தனின் அருகில் நின்ற சக்கரவர்த்தியை தான் பார்த்தாள்.
“உன் தோழிக்கு அவள் விரும்பிய வாழ்க்கை கிடைக்கணும்ணு நினைச்சியனா அந்த ஆதாரத்தை கொண்டா, அதை வச்சி அந்த மகேந்திரனுக்கு ஒரு வழி பண்ணிட்டு, உன் தோழியை இந்த கல்யாணத்துல இருந்து நான் காப்பாற்றுறேன். என்னை நம்பு. நாளைய விடியல் உன் தோழி வாழ்க்கையில நல்லது தான் செய்யும்.”
ஆரம்பத்தில் அவர் எது எதுவெல்லாமோ சொல்லி கேட்டுப் பார்த்தார். அவள் மசியவில்லை.
நிச்சயம் அந்த பேப்பர் இவர்களிடம் தான் இருக்கிறது என்பது சக்கரவர்த்திக்கு தெரியும். முகுந்தன் கைக்கு போயிருந்தால் இந்நேரம் நிலமையே வேறு. அவன் அதை வைத்து கொண்டு இவ்வளவு நேரம் சும்மா இருந்திருக்க மாட்டான். அப்படியும் இருக்கிறான் என்றால் நரேன் கொடுத்த பேப்பர் முகுந்தன் கைக்கு போகவில்லை என்று தானே அர்த்தம். அப்படி என்றால் அது அவளிடம் தான் இருக்கிறது. அவள் நிச்சயம் இந்த அறையில் தான் வைத்திருப்பாள். அந்த தெளிவு வந்த பிறகு தான் அவருமே
இங்கு வந்தார். அதனால் இவள் சொன்ன எந்த பொய்யையும் ஏற்கும் மனநிலையில் சக்கரவர்த்தி இல்லை. அவளும் தோழியின் கடைசி அஸ்திரத்தை கொடுக்கவும் விரும்பவில்லை. அப்படிப்பட்ட அவளையே சரிய வைத்தது அவரின் பேச்சு தான்.
தோழிக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க முடியும் என்று சொன்னதும் கொடுத்து விட்டாள். ஆனால் கொடுத்த பின் தான் சொன்னதை செய்வாரா என்ற குழப்பமே வந்தது அவளுக்கு. அதனால் தான் அப்படி இருந்தாள். சக்கரவர்த்தியை நம்பி தோழிக்கு துரோகம் செய்து விட்டோமோ என்ற குற்றவுணர்வு தான் இதுவரை அவளிடம் இருந்தது. ஆனால் மணமேடையில் அவர் மகனை மணக்கோலத்தில் பார்த்ததும் திலகாவின் கண்கள் நிறைந்து போனது.
மனம் கொள்ளா மகிழ்வோடு தான், தோழியிடம் வந்தாள். அவள் தாயிடம் பேச துடித்து கொண்டிருப்பது தெரிந்தது.
“ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. இப்படி ஆடம்பரமா அமர்களமா என் மூத்த பொண்ணு கல்யாணம் நடக்கும்ணு நான் கனவுல கூட நினைச்சது இல்ல. மனசு நிறைஞ்சி போச்சு. இனி எது பற்றியும் எனக்கு கவலை இல்லை. இப்படி ஒரு கல்யாணத்த என் பொண்ணு வாழ்க்கையில நடத்தி கொடுத்த அந்த கடவுள் இனியும் என்னை காப்பாத்துவான்.”
நெஞ்சம் நிறைந்து போய் நின்ற தாயை இயலாமையோடு பார்த்தாள். வார்த்தை வாய் வரை அவளுக்கு வருகிறது. அதற்கு மேல் வெளிவரவில்லை.
அவளை அந்நிலையில் பார்த்த திலகாவுக்கு, அந்த நொடி தான் சக்கரவர்த்தி சொன்னது நிஜம் என்று அவளுக்குமே தோன்றியது.
“அந்த பொண்ணு குடும்ப பாசம் உள்ளதும்மா. அதால குடும்பத்தை நாலு பேர் முன்னால விட்டு கொடுக்க முடியாது. தன் குடும்பத்துக்காக பிடிக்காத வாழ்க்கைக்குள்ள போய் அல்லல்படுமே தவிர தாய் தந்தையின் கண்ணீருக்கு நடுவில் சுயநலமா யோசிக்காது. அது மட்டுமல்ல ஊர் முன்னால அவன் வந்து என் மருமகள் பக்கத்துல மாப்பிள்ளையா உட்கார்ந்து இது எல்லாம் நடந்து அதன் பிறகு திருமணம் நிக்குறதுல எனக்கு உடன்பாடு இல்லை.”
“ நாளைக்கு இந்த வீட்டுல நடக்கிறது என் மகனோட திருமணமா இருக்கணும். அதுல ஒரு பஞ்சாயத்தை நான் விரும்பல. அதான் நானே தேடி வந்தேன். நான் செய்த தப்புக்கு நானே பிராயசித்தம் தேடிக்கிறேன்.”
அவ்வளவு உருக்கமாய் சொன்னவரை அந்த நொடி நம்ப தான் தோன்றியது. அதன் பிறகு தான் அவர் சுயரூபம் அது அல்லவே என்று பயம் வர ஆரம்பித்தது. ஆனால் அந்த பயம் அர்த்தமில்லாத பயம் என்று நிரூபித்து விட்டார் சக்கரவர்த்தி. மேடையில் இருந்த முகுந்தனையும் அவன் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்த சக்கரவர்த்தியையும் நெஞ்சம் நிறைய சந்தோஷத்தோடும் பார்த்தவள், தான் பார்த்ததை தோழியிடம் சொல்ல அவள் அருகில் நெருங்கி வந்தாள்.
அதே நேரம் அவளை நெருங்கி சுற்றி வளைத்து கொண்டனர் மாப்பிள்ளை வீட்டார். அதிலும் நீலவேணியையும் பிரபாவையும் பார்த்த மாத்திரத்திலே ஓவியா தளரத் தொடங்கினாள். இதுவரை கொஞ்சமாக இருந்த தைரியம் கூட அவளில் இருந்து விடை பெறத்தொடங்கியது.
நீலவேணி சந்தோஷத்தின் உச்சத்தில் தன் உறவுகாரர்கள் அனைவரையும் அழைத்து போட்டோ எடுப்பது வீடியோ எடுப்பது என யாருமே இவளை நெருங்க விடாத அளவு செய்து விட திலகா தூரமாய் நிற்க வேண்டியதாக போய் விட்டது. கூடவே அவள் ஒப்பனைகளை சரிபார்ப்பது நகைகளை எடுத்து விடுவது என அவள் அருகிலே நின்று கொண்டாள் நீலவேணி. அதன் பிறகும் யாருமே திலகாவை ஒவியாவின் அருகில் அனுமதிக்கவில்லை.
அடுத்து வந்த நொடிகளிலும ஓவியா பேச யாரும் அனுமதிக்கவில்லை. அவர்கள் சொல்வதையே அவளை கேட்க வைத்தனர். ஒரு வழியாக அவளை அழைத்து கொண்டு நீலவேணியே மாப்பிள்ளை அருகில் அமர வைக்க, ஓவியா கண்ணில் நீரோடே நிமிர்ந்து அவரை பார்த்தாள். அந்த பெண்மணியோ அவள் அழகை புகழ்ந்து திருஷ்டி கழித்தாள்.
ஓவியாவால் அழுகையை அடக்க முடியவில்லை. ஆனாலும் இவர்கள் முன் பேசும் துணிவும் வரவில்லை. அப்படியே உருகுலைந்து போய் அமர்ந்து விட்டாள். கூட்டத்தினரை கூட நிமிர்ந்து பார்க்கும் திராணியும் இல்லாது போய்விட்டது. அப்படி இருக்க… பிடிக்காத மாப்பிள்ளையை திரும்பி பார்ப்பாளா? பார்க்கவே இல்லை.
பெண் வந்து அமர்ந்ததுமே ஐயர் மந்திரங்களை ஒத தொடங்கி விட்டார். நாதஸ்வர இசையில் ஐயரின் மந்திரங்களுக்கு நடுவில் புது பூவாய் பூத்து நின்ற தன் மனைவியை உதட்டில் சிறு புன்னகையோடு பார்த்தான் முகுந்தன். அவளின் தலை குனிவும் கண்களில் தேங்கி நின்ற கண்ணீருமே அருகில் இருப்பது தான் என யாரும் சொல்லவில்லை என்பதை சொல்லி விட, அவளை சீண்டும் விதமாக நெருங்கி அமர்ந்தான்.
நத்தை தன் ஒட்டுக்குள் சுருங்குவது போல சுருண்டாள் பெண்ணவள்.
“என்னை விட அவன் மேல்ணு சொன்னால? அப்படிணா சந்தோஷமா இருக்க வேண்டியது தானே எதுக்கு நத்தை போல சுருளுறா? என்னை நேற்று உருகுலைய வச்சால. அதான் மாமாட்டயும் மாமிட்டயும் உண்மையை சொல்ல வேணாம்ணு சொன்னேன். என்னையா அழ வைக்குறா?
எண்ணியவன் உதடு பெருமையில் விரிந்தாலும் சேலையை கசக்கி கொண்டிருந்த அவள் கையையும் , நிமிர்ந்து பார்க்க முடியாமல் மொத்தமாய் தலையை சுருட்டி கொண்டு உள்ளே அவள்படும் பாட்டையும் பார்த்தவன் சகிக்க முடியாமல்,
“ஐ … லவ்… யூணு சொல்லு. அப்போ தான் தாலி கட்டுவேன். இப்படி எல்லாம் பக்கத்துல வந்து இருந்துட்டா என்கிறதுக்காக எல்லாம் தாலி கட்ட முடியாது.”
அவளை இது நாள் வரை வசீகரித்து கொண்டிருந்த குரல் குறும்பும் கிண்டலுமாக அவளின் மிக அருகில் கேட்க, திடுக்கிடலோடு நிமிர்ந்து அதிர்ந்து பார்த்தாள். அவளை நெருங்கி மிக நெருங்கி தோளோடு தோள் ஒட்டி மாப்பிள்ளை தோரணையில் இருந்தவனை பார்த்ததும் அவள் விழிகள் பெரிதாக விரிய, அவள் அருகாமையில் இருந்தவனோ விழி உயர்த்தி நடனம் படிக்க, நம்ப முடியாமல் கண்களை கசக்கி, அமர்ந்திருப்பவனை பார்த்தாள். முகுந்தன் தன் முத்து பல் சிரிக்க அவளை கிறக்கத்தோடு பார்த்து கண் சிமிட்டினான்.
“முகுந்த்…
அவள் குரல் நம்ப முடியாமல் ஒலித்தது.
“சீக்கிரம் சொல்லு. இல்ல எல்லாரும் பாக்குறாங்க என்கிறதுக்காக எல்லாம் தாலி கட்ட மாட்டேன்.”
அவன் மென்குரலில் மறுபடியும் சொல்ல…
“என்ன சொல்ல…”
அவள் புரியாமல் பார்த்தாள். நிஜம் அவளை மொத்தமாக குழப்பி அமர வைத்திருந்தது. திரும்பி முன்னாள் பார்த்தாள் சக்கரவர்த்தி முகம் முழுதும் சிரிப்போடு நிலவேணியோடு நின்று கொண்டிருந்தார். கூடவே இவள் பெற்றோரும் அவர் அருகிலே நிற்க, கண்ணீர் மல்க சக்கரவர்த்தியை தான் பார்த்தாள்.
அவர் இப்போதும் சிரிப்பு மாறாமல் அப்படியே நின்றார். அவள் உணர்வின் எல்லையில் இருப்பதை உணர்ந்த முகுந்தன்.
“ஏய்… சொல்லுடி…”
என மறுபடியும் கேட்க,
“ என்ன சொல்ல…”
மறுபடியும் தடுமாறினாள்.
“அதாண்டி. நான் உன்னை காதலிக்கிறேன் முகுந்த்ணு சொல்லு.”
அவன் வாயில் வைத்து முனங்க, அவன் கிண்டல் புரிந்தவள், அவனை போலவே மென்குரலில்,
“சொல்ல மாட்டேன்.”
என்றாள் தன் சிரிப்பை மறைத்து கொண்டு,
“ஏய் சொன்னா தாண்டி கட்ட முடியும். சாமிட்ட சத்தியம் பண்ணியிருக்கேன்.
என்ற போது ஐயர் தாலியை எடுத்து முகுந்தன் கையில் கொடுக்க, அதை வாங்கியவன், பேய் முழி முழிக்க, அதை பார்த்து சிரித்தவள்.
“கட்டு நான் சொல்றேன்.”
“இல்ல… நீ சொல்லு கட்டுறேன். பிளீஸ்டி. எல்லாரும் பாக்குறாங்க.
குழந்தையாக மாறி போனவனை பார்த்து சிரித்தவள் நெஞ்சம் நிறைய,
ஐ. லவ். யூ… புருஷ்… என்றாள் வெட்கத்தோடு, அவள் சொல்லி முடிக்கும் முன் அவன் கை அவளின் கழுத்தில் மாலையாகி அந்த பொன் தாலியை அணிவித்தது.
அன்றைய நாள் அந்த ஊரே கொண்டாடி தீர்த்தது. இரவு முகுந்தன் தங்கியிருந்த ஹோட்டலிலே அவர்களுக்கு முதல் இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திலகா, சுந்தரி, கல்யாணி மற்றும் அவளுடன் வேலை பார்த்த அத்தனை பெண்களின் கேலி கிண்டலுக்கு நடுவில் பால் செம்போடு முகுந்தன் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்தாள் ஓவியா.
அவளை அறைக்குள் தள்ளி விட்டு விட்டு அனைவரும் போய் விட, இரண்டு பெண்கள் மட்டும் போகாமல் அதிலே நின்றனர். ஒருவர் முகத்தை மற்றவர்கள் பரிதாபமாக பார்த்தவர்கள்.
“இவளை போய் சாருக்கு வப்பாட்டியா இருக்க கூட லாயக்கில்லனு சொன்னோம். இப்போ பாரு விதி அவரோட அறைக்கு நம்மளையே அனுப்பி வைக்க வச்சிடுச்சி.”
உச்சு கொட்டி கொண்டே இரண்டு பெண்களும் நகர்ந்தனர்.
அதே நேரம் தூரமாய் இது எல்லாவற்றையும் நிறைவோடு பார்த்தவாறு இருந்த திலகா அருகில் வந்தான் நளன்.
“ ஆமா இது எல்லாம் நமக்கு எப்போ?”
சொல்லியவாறே சுற்றி வந்து அவள் கழுத்து பகுதியில் முகம் புதைக்க,
“இப்போ என்றாலும் ஓகே தான்.”
கண்சிமிட்டி சொன்னவளை விழி அகலாமல் பார்த்தவன், விழியை உயர்த்தி உதட்டு சிரிப்போடு அவளை உறுத்து விழிக்க,
“ஏன் வேணாமா?”
என்றாள் குறும்பு புன்னகையோடு, அந்த குறும்பையும் குறும்பை சுமந்து நின்ற வெட்கம் நிறைந்த அவள் முகத்தையும் பார்த்தவன்,
“அப்போ அம்மாட்ட சொல்லிடட்டுமா?”
என்றான் உற்சாகமாக,
“எப்போ…”
என்றாள் அவசரமாக,
“வீட்டுக்கு போனதும்,”
என்றதும் மெல்ல குனிந்து நளினம் சிந்தும் முகத்தை அவனுக்கு காட்டாமல்,
“ஏன் இப்போ பேச மாட்டீங்களா?”
என்றாள் கஸ்தி குரலில், அவளின் கஸ்தி குரலும் நளின நெளிவும் அவனுள் எதையோ சட்டென விதைத்து விட,
“ஏய்… என்னடி இவ்வளவு ஸ்பீடா இருக்கிறா? நிஜமா தான் சொல்லுறியா? இல்ல வெறுப்பேத்த சொல்லுறியா?
என்றான் நம்ப முடியாதவனாய், அவனை ஏறிட்டு பார்த்தவள் முகம் முழுதும் மலர்ச்சியை படரவிட்டவாறு,
“வேணாம்ணா சொல்லுங்க. அறுபது வயசுல அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கலாம்.”
என்றாள் சற்று கோபத்தோடு,
அவளை நம்ப முடியாமல் அதிர்ந்து போய் அவன் நிற்க, அவன் சட்டையை பிடித்து தன்னோடு இழுத்தவள். அவன் முகத்தை தன் முகத்தருகில் கொண்டு வந்து அவன் விழிக்குள் தன் விழியை கலர விட்டவள் கொஞ்சும் குரலில்,
“எனக்கும்… உன்னோடு ஒவ்வொரு மணி துளியும் இருக்கணும்ணு ஆசை வந்திடுச்சி புருஷா…”
என்றாள் கிறக்கமாய்.
அதே நேரம்,
அங்கு உள்ளே.
பால் செம்போடு அன்ன நடை நடந்து வந்து கொண்டிருந்த தன் மனைவியை கண்ணில் காதலோடு பார்த்தான் முகுந்தன். பட்டுசாரி பளபளப்பில் எளிய அலங்காரத்தில் அவனை நிலை கொள்ளாமல் தவிக்க வைக்கும் தோரணையில் வந்து கொண்டிருந்தவளை பார்க்க பார்க்க அவன் நெஞ்சம் அவனை அறியாமல் துள்ளியது. அவள் நளினத்திலும் வெட்கத்திலும் தன்னை பறி கொடுத்தவாறு உறைந்து போய் அமர்ந்திருக்க, நெருங்கி சென்ற அவளோ அவன் முன் போய் நின்று மெல்லமாய் நிமிர்ந்து பார்த்தாள் வெட்க சிரிப்போடு.
அவள் பார்வையில் மொத்தமாய் தொலைந்தவன் அவள் விழிக்குள்ளே தன் விழியை கலந்தவாறு அப்படியே உறைந்து போய் இருக்க, சட்டென நினைவு வந்தவன் போல, தன்னை சுதாகரித்து கொண்டு மெத்தையில் இருந்து பட்டென எழுந்து அவசரமாக மெத்தையின் மீது கிடந்த தலையணையையும் பெட்ஷீட்டையும் எடுத்து கொண்டு போய் அந்த அறையின் ஒரு மூலையில் விரித்து விட்டு அதில் படுக்க ரெடியாக,
பெண்ணவளுக்கு எதுவுமே புரியவில்லை.
அவசரமாக பால் செம்பை அருகில் இருந்த மேஜையில் வைத்து விட்டு ஒடி அவன் அருகில் வந்தாள்.
அவன் அவளை கண்டு கொள்ளவே இல்லை. தலைக்கு மேலே கையை வைத்து கண்ணை மறைத்தவாறு படுத்து விட,
“இப்போ எதுக்கு இங்க வந்து படுத்திருக்கீங்க…”
சிணுங்கலோடு கேட்டவளை அவன் சட்டை செய்யவே இல்லை.
“ கேட்கிறது காதுல விழல.”
கொஞ்சம் குரல் உயர்த்தியே கேட்டாள். இப்போதும் அவனில் அசைவு இல்லை. அவசரமாக பரபரவென மூச்சை விட்டவள் சற்று கோபத்தோடே,
இப்போ பேச போறீங்களா இல்லையா?
என அவன் அருகிலே அமர்ந்து விட, மெல்லமாய் கண் மேல் இருந்த கையை நகர்த்தி கீழ் பார்வை பார்த்தவன்,
“நான் எதுக்கு பேசணும். நான் பேச மாட்டேன்.”
என்றான் இறுகிய குரலில்…
“ஏன் பேச மாட்டீங்க.”
கண்களை உருட்டி அவள் கேட்ட தோனியில் சிரிப்பு வந்தாலும் அதை வெளி காட்டாமல்,
“ ம்…இப்போ என் அப்பா அந்த மணமேடையில் என்னை கொண்டு வந்து இருந்தாம இருந்திருந்தா இந்நேரம் நீ மகேந்திரன் பொண்டாட்டியா தானே இருந்திருப்பா.”
என்றான் சற்று கோபத்தோடு, சொல்லி முடியும் வார்த்தையில் அவன் குரல் உடைய, அவன் கண்களின் மேல் இருந்த கையை எடுத்து விட்டவள்.
“ஒ… சாருக்கு அந்த கோபமா?”
என ராகம் பாடியவாறு அவன் சட்டை பட்டனை திருக தொடங்க, அவன் மறுபடியும் முறுக்கி கொண்டு அவள் கையை தட்டி விட்டவாறு மறுபடியும் கண்ணின் மேல் கையை வைத்து விட,
“ இப்போ சாரோட கோபத்தை தீர்க்க நான் என்ன செய்யணும்.”
என்றாள் ஊமை சிரிப்பை உதட்டின் அடியில் மறைத்தவாறு,
“ எதுவும் செய்ய வேணாம். நீ போய் அந்த கட்டில்ல படு. நான் இங்கே தான் படுப்பேன். அது தான் உனக்கு தண்டனை.”
சற்றும் இறங்கி வராமல் அவன் இருக்க,
“ ஓ. ஹோ… அது தான் தண்டனையா? நான் தான் சொன்னா கேட்காத பொண்டாட்டி தானே. அப்படி இருக்க இதை ஏன் கேட்கணும். இதையும் கேட்க மாட்டேன். நானும் இதுல தான் படுப்பேன்.”
என சட்டென அவன் அருகில் வந்து படுத்து விட, அதுவும் அவனை நெருங்கி, மிக நெருங்கி படுத்து விட, அதிர்ந்த உடலையும் உணர்வையும் மறைத்து கொண்டு,
“நீ என்ன செய்தாலும் நான் பேச மாட்டேன்.”
என்றான் மறுபடியும் முறுக்கி கொண்டு, அவனை ஊமை சிரிப்போடு பார்த்தவள்,
“என் புருஷனுக்கும் சேர்த்து நான் பேசிட்டு போறேன்.”
என்றாள் உற்சாகமாக, அவளை ஒரு கணம் திரும்பி பார்த்தவன் அவள் ஊமை சிரிப்பையும் உதட்டு மலர்ச்சியையும் பார்த்து வெறுப்பு அடைந்தவன் போல்…
“நான்… நான் உன்னை தொட மாட்டேன்.”
என அடுத்த குண்டை போட,
“நீங்க எதுக்கு தொடுறீங்க… நான் தொட்டுட்டு போறேன்.”
என்றாள் மிக… மிக… சாதாரணமாய், சொன்னதோடு நிற்காமல் அவனை கட்டி கொண்டு கண் சிமிட்ட,
“நான் முத்தம் கொடுக்க மாட்டேன்.”
என்றான் ரொம்ப கோபம் கொண்டவன் போல்,
“நீங்க எதுக்கு கொடுக்கணும். நான்… நான்…”
அவள் திணறலோடு நிறுத்த, சட்டென எழுந்தவன் முகம் முழுதும் ஆர்வத்தோடும் புன்னகையோடும்,
“சொல்லும்மா… சொல்லு… சீக்கிரம்… பிளீஸ்…”
என கன்னத்தையும் உதட்டையும் மாறி மாறி காட்ட,
வெட்கத்தில் நெளிந்து சிவந்தவள் அதற்கு மேல் அவன் முகம் பார்க்க முடியாமல் நாணி சிவந்து தன் முகத்தை இருக் கையாலும் மூடிக் கொள்ள…
அவளை அப்படியே தூக்கி மடியில் போட்டவன், அவளின் விழி மூடிய கை விரல்களை மெல்லமாய் அப்புறப்படுத்தி, நாணமும் நளினமுமாய் இதுவரை அவனை இம்சைபடுத்தி கொண்டிருந்த அவள் முகம் நோக்கி குனிந்தான்.
தன்னையும் தன் முகத்தையும் அவனுக்கு கொடுத்து விட்ட ஓவியா கண்மூடி அவள் கிறக்கத்தில் கிடக்க, மூடி இருந்த அவள் முகத்தில் முத்து குளிக்க ஆரம்பித்தான் முகுந்தன்.
முற்றும்.
Best Romantic Novel
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-32|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! ஓவியா தன் திருமணத்தின் கடைசி நொடியில் தவிப்போடு நிற்கிறாள். மகேந்திரனோடு அவள் வாழ்வா? முகுந்தனோடு அவரின் பயணமா?…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-31|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! திருமணத்திற்கு ரெடியாகும் ஓவியா ? இன்னும் 3 – மணி நேரத்தில் திருமணம் முகம் எல்லாம்…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-30|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! ஓவியாவின் பேச்சால் அதிர்ந்து போன முகுந்தன். அடுத்து அவன் எடுக்க போகும் முடிவு தான் என்ன? அவளிடமிருந்து…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-29|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! முகுந்தனின் செயலால் தடுமாறும் ஓவியா?தன் காதலை சொல்வளா? இல்லை மறுபடியும் மனதை மறைத்து நடிப்பாளா? திருமணத்திற்கு…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-28|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! ஓவியா முன்பே பெண் பார்க்க கிளம்புகிறான் முகுந்தன்ஓவியாவின் திருமணத்திற்கு வந்து வேலை செய்யும் முகுந்தன். தன் முன்னால்…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-27|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! ஓவியா முன்பே பெண் பார்க்க கிளம்புகிறான் முகுந்தன். இப்போவாவது தன் காதலை வெளிப்படுத்தினாளா ஒவியா? குளித்து…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-26|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! முகுந்தன் வீட்டிற்குள் நுழையும் ஒவியா?மருமகளாக நுழைந்தாளா? அல்லது மணமாக போவதை சொல்ல நுழைந்தாளா? தன்னை பார்த்து…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-25|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! கேரளா வந்து விட்ட ஓவியா மனதுக்குள்ளே ஒடுங்க அப்படி மெட்ராஸில் என்ன தான் நடந்தது? முகுந்தனை ஒதுக்கியதால்…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-24|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! ஓவியாவை கொலை செய்ய துடிக்கும் அந்த மர்ம நபர் யார் என்று ஒவியா தெரிந்து கொண்டாளா? அது…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-23|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! உயிரை பணயம் வைத்து நளன் திலகாவை காப்பாற்றி கொண்டு வருகிறான். இப்பவாவது அவன் காதலை ஏற்று கொள்வாளா…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-22|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! வாணியின் சூழ்ச்சி தெரியாமல் தீ விபத்தில் மாட்டி கொண்ட திலகா. நளன் காப்பாற்ற வருவாரா? வாணியின் சூழ்ச்சி…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-21|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! ஓவியாவை வெறுப்பேற்ற சங்கீதாவுடன் கலக்கும் முகுந்தன். முகுந்தனை வெறுப்பேற்ற மகேந்திரனோடு கடலை போடும் ஓவியா. அடுத்து என்ன?…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-20|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! முகுந்தனுடனே மெட்ராஸ் வரும் ஓவியா. ஒரு வார இணைவில் தன் மனதை திறப்பானா? முகுந்தன். உள்…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-19|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! ஓவியாவின் வீட்டிற்குள் அதிரடியாய் நுழையும் முகுந்தன். அவளின் திருமணம் தடைபடுமா? “அது எப்படி தம்பி. நிச்சயமான பொண்ணை…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-18|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! முதன்முறை தன் காதலை நளனிடம் சொல்லும் முகுந்தன். காணாமல் போன தன் காதலை தேடி போவானா? …
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-17|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! பிரிந்து போன ஒவியா முகுந்தன் ஜோடி.தாயின் சூழ்ச்சி தெரியாமல் ஊருக்கு வரும் ஒவியா . தாயின் சூழ்ச்சியில்…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-16|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! ஒரு நாள் பயணம். அதில் முகுந்த் ஓவியா காதல் மலர்ந்ததா? அல்லது திலகா நளன் காதல் மலர்ந்ததா?…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-15|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! திலகா நளனின் காதல் பயணத்தில் அடுத்து நடப்பது என்ன? தன் வீட்டிற்கு அவளை அழைத்து செல்லும் நளனால்…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-14|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! நளன் திலகா காதலை அறிந்து கொள்ளும் ஓவியா. அவள் வாழ்வில் வசந்தம் வீச முயற்சி எடுத்தாளா? இல்லையா?…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-13|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! தன் காதலை முகுந்தன் உணரும் நொடி. தன் காதலை தேடி போவானா? பால்கனியில் நின்று தன் மென்மையான…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-12|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! திலகாவின் வருகையும் அதனால் நளனின் உற்சாகமும். மனம் மாறி சென்னை வந்துவிட்ட திலகாவின் மனது மாறியதா?…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-11|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! முகுந்தனுடன் மல்லுகட்டும் ஒவியா? அவளின் உள்ள கிடக்கையை அறிந்து கொள்வானா முகுந்தன். ஓவியாவின் பார்வையால்…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-10|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! ஒலியா முகுந்தின் மோதல் ஆரம்பம். மோதல் காதலாகுமா? மறுநாள் முகுந்துக்கு தலைவலியை கொடுக்காமல் குறிப்பிட்ட…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-9|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! தன் அலுவலகம் வரும் ஓவியாவை கிண்டலோடு வரவேற்ற முகுந்தன். அவனை சீற்றத்தோடு பார்க்கும் ஒவியா?…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-8|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! திலகாவின் நிலையை அறிந்து கொள்ளும் ஒவியா? அடுத்து நடக்க போவது என்ன? சக்கரவர்த்தி எண்டர்பிரைஸஸ் இந்த…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-7|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! முகுந்தன் செயலால் மனமுடையும் ஓவியா…இதற்கு பின் அவன் நினைவே இன்றி வாழ்க்கையை தொடர நினைக்கும் என உறுதியேற்கிறாள்….
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-6|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! வேலை தேடி அலையும் ஒவியா?வீட்டில் மொத்தமாக முடங்கும் திலகா? பட்டாம்பூச்சாய் இதுவரை பறந்து வந்த…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-5|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! ஹாஸ்பிட்டலை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விடும் முகுந்த். பதறி துடிக்கும் ஒவியா? அதன் பின்…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-4|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! இடிபாடுகளுக்கு நடுவில் 3 – நாளாய் மாட்டி கொண்ட முகுந்த் ஓவியாவின் நிலை என்ன ஆனது? அவர்களை…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-3|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! மலை சரிவில் மாட்டி கொண்டு இடிபாடுகளின் நடுவில் இருந்த ஓவியாவுக்கு நடந்தது என்ன? …
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-2|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! இருட்டு பகுதியில் முன்பின் தெரியாத ஒரு இளைஞனோடு அதிலும் நெருங்கி அமர்ந்தவாறு, அடுத்து நடந்தது என்ன?…
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-1|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! முதல் சந்திப்பிலே முட்டி கொள்ளும் காதல் ஜோடி. காதல் மன்னன் ஊரில் கொடிகட்டி பறக்கும் பிஸ்னஸ்மேன் முகுந்த்….